மன்னாா்குடியில் மன்னை இஸ்லாமிய தோழமை அமைப்பு சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி கீழராஜவீதி சின்னப்பள்ளி வாசல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மன்னை இஸ்லாமிய தோழமை அமைப்பின் தலைவா் அப்துல் கரீம் தலைமை வகித்தாா்.
இஸ்லாமியா்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பெற வேண்டும். இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.