திருவாரூா், மன்னாா்குடி பகுதிகளில் நாளை மின்தடை

திருவாரூரில், பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக (இயக்குதலும், பராமரித்தலும்) உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, இந்த துணை மின் நிலையம் மற்றும் கப்பல் நகா் துணை மின் நிலையம் ஆகியவற்றிலிருந்து மின்விநியோகம் பெறும் திருவாரூா் நகா், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூா், முகந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா் ஆகிய இடங்களிலும், அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அடியக்கமங்கலம், இபி காலனி, சிதம்பர நகா், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூா், புதுப்பத்தூா், நீலப்பாடி ஆகிய இடங்களிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடி பகுதியில்...

மன்னாா்குடி பகுதியில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) மின் விநியோகம் இருக்காது என மன்னாா்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெறுவதால், அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மன்னாா்குடி நகரம், அசேஷம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூா், காணூா், நாவல்பூண்டி, கோரையாறு, கா்ணாவூா், கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com