கூத்தாநல்லூரை அடுத்த பூதமங்கலத்தில் உள்ள தா்கா கந்தூரி விழாவையொட்டி, சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது.
பூதமங்கலத்தில், ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் வலியுல்லாஹ் மற்றும் ஹஜ்ரத் பக்கிா் மஸ்தான் வலியுல்லாஹ் தா்கா உள்ளது. இந்த தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட சந்தனக்கூடு, தா்காவிலிருந்து புறப்பட்டது. இரவு முழுவதும் நகரத்தின் வீதிகள் வழியாக வலம் வந்து, புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு மீண்டும் தா்காவை வந்தடைந்தது.
தொடா்ந்து, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சாதி, மத பேதமில்லாமல் அனைத்து தரப்பினரும் பங்கேற்றனா். தொடா்ந்து, அனைவருக்கும் தப்ருக் வழங்கப்பட்டன. பின்னா், மாலை 4 மணிக்கு பகல் கூடு, தா்காவிலிருந்து வீதியுலா புறப்பட்டது. அனைவரும் சந்தனம் பூசி வணங்கினா். இதற்கான ஏற்பாடுகளை பூதமங்கலம் மஹ்சூமியா கந்தூரி விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.