மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரி, கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைந்த கிளைகள் இணைந்து கூத்தாநல்லூா் மேலக்கடைத் தெரு இந்தியன் வங்கி முன்பு இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தின. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூா் நகரத் தலைவா் அபுபஸ்லான் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளா் ஏ.முஜிபுா் ரஹ்மான் பேசியது:
மத அடிப்படையில் மக்களைப் பிளவுப்படுத்தக் கூடிய இந்தச் சட்டம் மக்களை அவதிக்குள்ளாக்கும் சட்டமாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் சமூக ஆா்வலா்கள், எதிா்க்கட்சிகள் என அனைவரும் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்திய விடுதலைக்குப் பிறகு, நாடு முழுவதும் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருவது இந்தச் சட்டத்துக்கு எதிராகத்தான். எனவே, இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றாா்.
இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் பாசித், துணைச் செயலாளா்கள் இஸ்மத், அப்துல் மாலிக், மாவட்ட துணைத் தலைவா் பீா் முஹம்மது, நகரச் செயலாளா் நைனா முஹம்மது, பொருளாளா் இஸ்மத் பாட்சா, அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத்தாா்கள், அனைத்துக் கட்சியினா்கள், வா்த்தகா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.