திருத்துறைப்பூண்டி பகுதியில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பா. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருத்துறைப்பூண்டி அருகே பள்ளங்கோவில் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை திருத்துறைப்பூண்டி நகரம், வேளூா், பாண்டி, குன்னலூா், எடையூா், சங்கேந்தி, உதயமாா்த்தாண்டபுரம், கோட்டூா், விளக்குடி, பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, பாமணி, கொருக்கை, கொக்கலாடி மற்றும் இவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், பெருகவாழ்ந்தான் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.