நீடாமங்கலம் ஒன்றியம், சித்தமல்லி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் கே. சந்தானகிருஷ்ண ரமேஷ், உதவி பொறியாளா் ஏ.சுகந்தி, ஊராட்சி தலைவா் குணசீலன், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் நகர அமைப்பாளா் கே.ஆா்.கே. ஜானகிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் மரக்கன்றை நட்டு விழாவைத் தொடங்கி வைத்து பேசினாா். விழாவில் ஒன்றிய அலுவலா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் கருப்பையன் நன்றி கூறினாா்.