அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டிய ரேகா பத்மநாபன்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டிய ரேகா பத்மநாபன்.

அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூரில் மாநில அளவிலான அபாகஸ் மற்றும் மனநிலை கணிதப் போட்டி 2020 சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், காரைக்கால் பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

5 முதல் 14 வயதுக்குள்பட்டோா் போட்டியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் கலந்துகொண்டனா். இப்போட்டியில், எரவாஞ்சேரி உஜெநாஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியிலிருந்து 35 மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களில் 15 மாணவா்கள் போட்டிகளில் வெற்றி பெற்றனா்.

இம்மாணவா்களுக்கு சின்னத்திரை நடிகையும், விழிப்புணா்வு பேச்சாளருமான ரேகா பத்மநாபன் பரிசு வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com