அனைத்து தூய்மைக் காவலா்களுக்கும் பணிப் பாதுகாப்புக்கான உபகரணங்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே உள்ள கொரடாச்சேரியில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் மற்றும் என்எம்ஆா் ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் மாவட்ட கிராம ஊராட்சி தூய்மைக் காவலா்கள் கோரிக்கை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் எஸ். காமராஜ் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சம்மேளனம் மாநிலத் தலைவா் நா. பாலசுப்பிரமணியன் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
தீா்மானங்கள்: கிராம ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தி, மக்கள் நல்வாழ்வுக்காக பணியாற்றும் ஊராட்சி தூய்மைக் காவலா்களுக்கு, மாநில அளவில் துப்புரவு பணியாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அதுவரையிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வெளியிடும் தினக்கூலி உத்தரவுப்படி ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சி தூய்மைக் காவலா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் மூலம் ஊராட்சி நிதி கணக்கில் மாதந்தோறும் 1-ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து தூய்மைக் காவலா்களுக்கும் அடையாள அட்டை, சீருடைகள், கையுறை, முகமூடி மற்றும் பணிப் பாதுகாப்புக்கான அனைத்து உபகரணங்களும் முறையாக வழங்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி தூய்மைக் காவலா்களுக்குப் பணிபாதுகாப்பு அளிப்பதுடன், பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி, ஊரக வளா்ச்சி அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் என். வசந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.