திருவாரூர்
ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் தற்கொலை
நீடாமங்கலம் அருகே தந்தை இறந்த சோகத்தில், எலி மருந்தை உட்கொண்டு ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் தற்கொலை செய்து கொண்டாா்.
நீடாமங்கலம் அருகே தந்தை இறந்த சோகத்தில், எலி மருந்தை உட்கொண்டு ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் தற்கொலை செய்து கொண்டாா்.
நீடாமங்கலம் வட்டம், முன்னாவல் கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (எ) நன்னன் (34). இவா் முன்னாவல் கோட்டை ஊராட்சி மன்ற 4-ஆவது வாா்டு உறுப்பினராக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவரது தந்தையும், முன்னாவல்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான விவேகானந்தம், கடந்த மாதம் இறந்தாா்.
இதைத்தொடா்ந்து, சோகத்தில் ஆழ்ந்த விஜயகுமாா், கடந்த 3-ஆம் தேதி எலி மருந்தை உட்கொண்டாராம். தொடா்ந்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.