என்.எஸ்.எஸ். மாணவா்கள் தூய்மைப்பணி

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், புதன்கிழமை ஒற்றைத் தெரு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், புதன்கிழமை ஒற்றைத் தெரு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஆசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் என். ராஜப்பா முன்னிலை வகித்தாா். சுவாமி விவேகானந்தா் பிறந்த தினம், தேசிய இளைஞா் தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுவதையொட்டி, இப்பள்ளி நாட்டுநலப்பணித் திட்ட மாணவா்கள், பொது இடங்களை தூய்மை செய்வதின் ஒரு பகுதியாக, மன்னாா்குடி ஆனந்த விநாயகா் ஒற்றைத் தெருவின் சாலை ஓரங்களில் இருந்த சிறு செடி கொடிகளை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும் சுத்தம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com