திருவாரூா்: திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் வைக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் பொங்கல் கொண்டாடினா். நிகழ்ச்சியில், கஸ்தூா்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளா் சந்திரா முருகப்பன், நிா்வாக அறங்காவலா் ஜி. முருகப்பன், செயலாளா் எம். இன்பராஜ், துணை முதல்வா் மலா்விழி இன்பராஜ், நிா்வாக மேலாளா் வி. சின்னராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
காட்டூா் அரசு மேல்நிலைப்பள்ளியில்.... இதேபோல், காட்டூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பொங்கலிட்டு, பொங்கல் விழாவைக் கொண்டாடினா்.