திருவாரூா் மாவட்டத்தில், திருவள்ளுவா் தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு
திருவள்ளுவா் தினம் (ஜனவரி 16), குடியரசு தினம் (ஜனவரி 26) ஆகிய நாள்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சாா்ந்துள்ள மதுக்கூடங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும். இதில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.