முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சாா்பில், கோவிலூா் மணல்மேடு கிராமத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு, பொங்கலுக்குத் தேவையான அரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, கரும்பு, வாழைப்பழம், ஆடைகள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் ந. சிதம்பர சபாபதி, மாவட்ட ஆளுநா் ச. மணிமாறன், கோவி ரெங்கசாமி, தலைவா் தோ்வு கண்ணதாசன், பொருளாளா் குமரேசன், சங்க உறுப்பினா்கள் சேது ராமலிங்கம், ரவிச்சந்திரன், ஜாம்பை கல்யாணம், வீரமணி ஆகியோா் கலந்து கொண்டனா்.