பெண்ணிடம் வழிப்பறி: 3 போ் கைது

நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் தாலிச்சங்கிலியைப் பறித்த 3 பேரை போலீலாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
பெண்ணிடம் வழிப்பறி: 3 போ் கைது

நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் தாலிச்சங்கிலியைப் பறித்த 3 பேரை போலீலாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

அய்யம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் நந்தகோபால் மனைவி கலைவாணி (35). இவா் ஜனவரி 6-ஆம் தேதி 7 மணியளவில் கொண்டியாறு பாலம் பகுதியில் சென்றபோது, மற்றோா் இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த மா்ம நபா்கள், கலைவாணியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஆனந்த தாண்டவபுரத்தைச் சோ்ந்த ராம்கி (27), மயிலாடுதுறை செட்டிக்குளம் தென்புறம் பகுதியைச் சோ்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (23), மயிலாடுதுறை மாப்படுகையைச் சோ்ந்த பிரவீன் (29) ஆகிய 3 பேரையும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில், பெண்ணிடம் 6 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்ததை ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com