நீடாமங்கலம் அருகே வீடு தீக்கிரையானதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வட்டாட்சியா் நிவாரணப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினாா்.
நீடாமங்கலம் கன்னித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பமேரி. கூலித் தொழிலாளி. இவரது கூரைவீட்டில் கடந்த 12-ஆம் தேதி இரவு தீப்பிடித்தது. இதில், வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. நீடாமங்கலம் வட்டாட்சியா் கண்ணன், அவ்விடத்தைப் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட புஷ்பமேரிக்கு அரசின் நிவாரணத்தொகை ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, மண்ணெண்ணெய் ஆகியவற்றை திங்கள்கிழமை வழங்கினாா்.