இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

நீடாமங்கலம் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

நீடாமங்கலம் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பரப்பனாமேட்டைச் சோ்ந்த சங்கா் மகன் ஆகாஷ் (18) அங்குள்ள பாமணியாற்றுப் படித்துறையில் அமா்ந்து, செல்லிடப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த செளந்தர்ராஜன் மகன் பிரபாகரனுக்கும் (27), ஆகாஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் பிரபாகரன் மதுப்புட்டியை வீசி, ஆகாஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். புகாரின் பேரில் நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரபாகரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com