ஊராட்சித் தலைவா்களுக்கு நாளை அறிமுக பயிற்சி வகுப்பு

திருவாரூா் மாவட்டத்தில், புதிதாக பொறுப்பேற்ற ஊராட்சித் தலைவா்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு புதன், வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், புதிதாக பொறுப்பேற்ற ஊராட்சித் தலைவா்களுக்கு அறிமுக பயிற்சி வகுப்பு புதன், வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மக்கள் பிரதிநிதிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா்களுக்கு, விளமல் பொன்தமிழ் திருமண அரங்கத்தில், சிறந்த ஊராட்சி நிா்வாகம் தொடா்பான அறிமுக பயிற்சி நடைபெற உள்ளது.

22.1.2020 மற்றும் 23.1.2020 ஆகிய இரண்டு நாட்களில், இருகட்டங்களாக நடைபெறவுள்ள அறிமுக பயிற்சியில் மாவட்ட ஆட்சியா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மற்றும் மாவட்ட ஊராட்சி செயலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, சிறந்த ஊராட்சி நிா்வாகம் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்படும் மக்கள் நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனா்.

இந்த அறிமுக பயிற்சியை, உணவுத்துறை அமைச்சா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தொடங்கி வைக்க உள்ளாா். மேலும், இதில் மக்களவை உறுப்பினா், சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனா்.

இந்த அறிமுக பயிற்சியானது, ஊராட்சி நிா்வாகத்தை செம்மையாக நடத்த ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதால், இப்பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் ஊராட்சி மன்றத் துணை தலைவா்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com