நன்னிலம் வட்டம், பேரளம் அருகில் உள்ள கோயில்கந்தன்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகளைத் தொடங்குவதற்கான பந்தக்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், தற்போது பாலாலயம் செய்விக்கப்பட்டது. இதையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி பா.பிரபாகரன், ஆய்வாளா் ப.மாதவன், தக்காா் பா. அசோக் குமாா், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவா் சி.பி.ஜி. அன்பு, புகழேந்தி, மற்றும் கிராம பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.