ஜேசிஐ ஆட்சிமன்ற குழு பதவி ஏற்பு

பேரளம் ஜேசிஐ இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவும், ஆட்சிமன்றக் குழு பதவியேற்பு விழாவும் அண்மையில் நடைபெற்றது.
பேரளம் ஜேசிஐ விழாவில் பதவியேற்றுக்கொண்ட புதிய ஆட்சிமன்ற குழுவினா்.
பேரளம் ஜேசிஐ விழாவில் பதவியேற்றுக்கொண்ட புதிய ஆட்சிமன்ற குழுவினா்.

பேரளம் ஜேசிஐ இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவும், ஆட்சிமன்றக் குழு பதவியேற்பு விழாவும் அண்மையில் நடைபெற்றது.

பேரளம் ஜேசிஐ 2020- ஆம் ஆண்டின் புதிய தலைவராக ஆசிரியா் என்.கே. அருண்குமாா், செயலராக பி. கிருஷ்ணகுமாா், பொருளாளராக எஸ். ராஜேஷ்பிரபுராஜ் மற்றும் உறுப்பினா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சிறப்பு விருந்தினா்களாக திருவாரூா் மாவட்ட கவுன்சிலா் ஜெ. முகமதுஉதுமான், ஜேசிஐ இயக்கத்தின் மண்டலத் தலைவா் திருச்சி வழக்குரைஞா் ஜெயச்சந்திரன், முன்னாள் தேசிய துணைத் தலைவா் ஆா். சதீஷ்பாபு ஆகியோா் கலந்துகொண்டனா். பேரளம் காவல்துறை ஆய்வாளா் இரா.செல்வி சிறப்புரையாற்றினாா்.

விழாவில் பேரளம் மகரிஷி பெளா்ணமி வழிபாட்டு மன்றத்தினருக்கு ஆன்மிக சேவை விருதும், மாணவி ஜெயப்பிரியாவுக்கு நாட்டியக்கலா விருதும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com