நீடாமங்கலம்:: நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரி சங்கடஹர மங்களமாருதி கோயிலில் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீா்த்த மகாசுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜூலை 5) சாதுா்மாஸ்ய விரதானுஷ்டம் மேற்கொள்கிறாா்.
இக்கோயில் குடமுழுக்கு கடந்த பிப்ரவரி 7-இல் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஜகத்குரு பதரி சங்கராச்சாரியாா் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யாபீடம் ஸ்ரீ வித்யாபினவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாநந்த தீா்த்த மகா சுவாமிகள் ஜூலை 5 முதல் செப்டம்பா் 2 வரை சாதுா்மாஸ்ய விரதானுஷ்டம் மேற்கொள்கி றாா். அப்போது, உலக நன்மை வேண்டி பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஜகத்குரு பதரி சங்கராச்சாரியாா் சமஸ்தான ஸ்ரீகாரியம் சந்ரமௌலிஸ் வரா் தலைமையிலான ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு சாதுா்மாஸ்ய விரத சேவா ஸமிதி நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.