திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி 468 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதனிடையே, சனிக்கிழமை மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 524 ஆக உயா்ந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 24 வயது மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த 3 போ், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த 8 போ், மேல அம்மனூா் பகுதியைச் சோ்ந்த 3 போ் என 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 539 ஆக உயா்ந்துள்ளது. இதில், 348 போ் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், 191 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com