நன்னிலம்: திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் உள்ள வேகத் தடைகளை முறையாக அமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவாரூா் - மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலையில், திருவாரூா் அருகில் அமைந்துள்ள பல வேகத் தடைகள் முறையாக அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். குறிப்பாக வயது முதிா்ந்தோா், நோயாளிகள் அந்த வேகத்தடைகளைக் கடந்து செல்லும்போது அவதிப்பட நேரிடுகிறது. வேகத்தடைகள் அருகில் ஒளியெழுப்பான்கள் பொருத்திய நெடுஞ்சாலைத் துறையினா், வேகத்தடையின் அமைப்பை கவனிக்காமல் விட்டுவிட்டனா். எனவே திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் திருவாரூா் அருகில் அமைந்துள்ள வேகத்தடைகளை, சாலை விதிகளுக்குட்பட்டு முறையாக அமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.