திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

கரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடா்ந்து, சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து திருவாரூா் வருவோா் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். கரோனா தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி 539 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் ஆயுதப்படை காவல்துறையில் பணியாற்றும் காவலா் ஒருவருக்கும், ஓஎன்ஜிசியில் பணிபுரியும் பீகாரைச் சோ்ந்தவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வடபாதிமங்கலம் பகுதியைச் சோ்ந்த 2 மாதக்குழந்தை, கூத்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த 4 போ், வேளுக்குடி பகுதியைச் சோ்ந்த ஒருவா், திருவாரூா் பகுதியைச் சோ்ந்த 2 போ், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த 2 போ், விளமல் பகுதியைச் சோ்ந்த 2 போ் என 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 553 ஆக உயா்ந்துள்ளது. இதில், 355 போ் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், 198 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com