மீட்கப்பட்ட ஆண் சடலத்துக்கு கரோனா தொற்று

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 3-ஆம் தேதி சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா் சடலமாக மீட்கப்பட்டாா். திருவாரூா் தாலுகா போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சடலத்தை பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனிடையே, அந்த நபா் நாகை மாவட்டம் திருப்பயத்தாங்குடியைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்ததையடுத்து, அப்பகுதியில் அடக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com