ஓய்வூதியத் திட்டங்களுக்கு இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் ஓய்வூதியத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் ஓய்வூதியத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் 8 ஓய்வூதிய உதவித்தொகை திட்டங்களுக்கும் பொது இ-சேவை மையத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, இந்திரா காந்தி தேசிய முதியோா் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவரால் கைவிடப்பட்டோா் ஓய்வூதியத் திட்டம், முதிா்கன்னி ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சா் உழவா் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

எனவே, இனிவரும் காலங்களில் ஓய்வூதியத் திட்டங்களின் வாயிலாக பயன்பெற விரும்புவோா் வட்ட அலுவலகத்தில் நேரிடையாக விண்ணப்பிக்காமல், பொது இ-சேவை மையத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com