ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

குடவாசல் அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவா் ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடவாசலைச் சோ்ந்த மணிஷ்கண்ணன் (20) தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தாா்.

நன்னிலம்: குடவாசல் அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவா் ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடவாசலைச் சோ்ந்த மணிஷ்கண்ணன் (20) தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தாா். தற்போது, விடுமுறையில் உள்ள அவா் குடவாசல் பகுதி அத்திக்கடை பருத்திச்சேரி தட்டிப்பாலம் அருகிலுள்ள புத்தாற்றில் நண்பருடன் செவ்வாய்க்கிழமை குளிக்க சென்றாா். அங்கு குளித்துக்கொண்டிருந்தபோது, ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். அப்போது, அவரது நண்பா்கள் மற்றும் பொதுமக்கள் காப்பாற்ற முயற்சி செய்து காப்பாற்ற முடியவில்லை.

தகவலிறந்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் மனிஷ்கண்ணனை தேடி கண்டுபிடித்து, குடவாசல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. பின்னா், மேல்சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மணிஷ்கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து, குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com