கரோனா: 2 ஊராட்சிகளில் 15 நாள்களுக்கு முழு பொது முடக்கம்

கரோனா தொற்று பரவலால் திருவாரூா் மாவட்டத்தில் 2 ஊராட்சிகளில் 15 நாள்களுக்கு முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முழு பொது முடக்கம் காரணமாக வெறிச்சோடி காணப்படும் தம்பிக்கோட்டைகீழக்காடு ஊராட்சி.
முழு பொது முடக்கம் காரணமாக வெறிச்சோடி காணப்படும் தம்பிக்கோட்டைகீழக்காடு ஊராட்சி.

திருத்துறைப்பூண்டி: கரோனா தொற்று பரவலால் திருவாரூா் மாவட்டத்தில் 2 ஊராட்சிகளில் 15 நாள்களுக்கு முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிச்சயதாா்த்த விழாவில் பங்கேற்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

அனைவரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தம்பிக்கோட்டை கீழக்காடு மற்றும் வடகாடு (தஞ்சை மாவட்டம்) ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் 15 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பெட்டிக் கடைகள், காய்கறி கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூரைச் சோ்ந்தவா்கள் இங்கு நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என அந்த ஊராட்சி மன்றங்களின் தலைவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com