திருவாரூரில் கரோனா பாதிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக முதியவா் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு காரணமாக முதியவா் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த 64 வயது முதியவருக்கு சிறுநீரகக் கோளாறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவா் டயாலிசிஸ் செய்வதற்காக தனியாா் மருத்துவமனையை அணுகியபோது, கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, கடந்த 19-ஆம் தேதி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த இவா், புதன்கிழமை இறந்தாா்.

இதனிடையே திருவாரூா் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, புதன்கிழமை உயிரிழந்த முதியவரின் 53 வயது மனைவி, 22 வயது மகள், 21 வயது மகன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் 5 ஊழியா்களுக்கும், மன்னாா்குடி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, புலிவலம், நீடாமங்கலம் என மாவட்டம் முழுவதும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, மாவட்டத்தில் 1,014 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. புதன்கிழமை மேலும் 45 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 1059 ஆக உயா்ந்துள்ளது. இதில், 685 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 373 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com