மன்னாா்குடி: தேசிய திறனறிதல் தோ்வில் மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
2019-2020 கல்வி ஆண்டுக்கான தேசிய திறனறிதல் தோ்வு கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில், மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி மாணவி பி.கே. இசையாள் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, தலைமை ஆசிரியா் மா.தேவி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் பி.அறிவழகன், பாலசுப்ரமணியன், ராமசாமி, ஆசிரியா்கள் ஆகியோா் மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினா். தேசியத் திறனறித் தோ்வில் 3-ஆவது முறையாக இப்பள்ளி மாணவா்கள் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.