கரோனா: நீடாமங்கலத்தில் கடைகளுக்கு கடும் கட்டுப்பாடு

நீடாமங்கலத்தில் கரோனா பரவலால் கடைகள் அனைத்தும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை காலை 6 முதல் பிற்பகல் 3 மணிவரை மட்டுமே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் கரோனா பரவலால் கடைகள் அனைத்தும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை காலை 6 முதல் பிற்பகல் 3 மணிவரை மட்டுமே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத் தலைவா் ராஜாராமன் வட்டாட்சியருக்கு திங்கள்கிழமை அனுப்பிய மனு விவரம்:

நீடாமங்கலம் நகர பகுதியில் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள் கூடி ஆலோசித்து சுயமாக கடைகளின் நேரத்தைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 3 மணிவரை உணவகங்கள் உள்பட அனைத்துக் கடைகளும் இயங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com