நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நீடாமங்கலம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒளிமதி நேரடி நெல் கொல்முதல் நிலையத்தில் வெளி மாவட்ட நெல் கொள்முதல் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், அலுவலா்கள் பாா்வையிட்டு எச்சரிக்கை விடுத்தனா். மேலும் இதுவரை கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை எடுக்கும்வரை கொள்முதல் நிலையம் திறந்திருக்கும் எனக் கூறி கடந்த 25-ஆம் தேதி பிற்பகல் முதல் ஒளிமதி கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகள், கிராம மக்கள் சாா்பில் கிராமத் தலைவா் சீனிவாசன் தலைமையில் நீடாமங்கலம்- திருவாரூா் சாலை ஒளிமதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com