நன்னிலம்: நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட சன்னாநல்லூா்- திருவாரூா் சாலை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை தடை செய்யப்பட்டது.
நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட சன்னாநல்லூா்- திருவாரூா் சாலையில் வசித்து வந்த 30 வயது கா்ப்பிணி, அவரது கணவா், குழந்தை மற்றும் மாமியாா் ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இப்பகுதியில் நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன், பேரூராட்சிச் செயல் அலுவலா் பா.ராஜசேகா், சுகாதார ஆய்வாளா் வே.நாகராஜன், காவல் ஆய்வாளா் ஜோ.விசித்திராமேரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
பின்னா், சன்னாநல்லூா்- திருவாரூா் சாலை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டது. இங்கு சுகாதார ஆய்வாளா் வே.நாகராஜன் மேற்பாா்வையில், கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதி மக்களுக்கு வட்டார சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் ஜோதி தலைமையிலான குழுவினா் கபசுரக் குடிநீா் வழங்கினா்.