திருவாரூரில் மேலும் 112 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஒருவா் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஒருவா் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவாரூரில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வலங்கைமான் பகுதியில் 35 போ், மன்னாா்குடி ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் 28 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், திருவாரூரைச் சோ்ந்த காவலா் ஒருவா், குடவாசல் பகுதியைச் சோ்ந்த கணவன்- மனைவி இருவா், சன்னாநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் என 112 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வலங்கைமான், ஆலங்குடி பகுதிகளில் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், வலங்கைமான் பகுதியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த 16 ஆம் தேதி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ரத்த அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 70 வயது பெண், 17-ஆம் தேதி உயிரிழந்தாா். அவருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, இவரது இறப்பு கரோனா தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1661 ஆக உயா்ந்துள்ளது. இதில், 952 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 703 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com