மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 1500 நபா்களுக்கு சிகிச்சையளிக்க வசதிகள் தயாா்: அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 1,500 நபா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, தயாா்நிலையில் உள்ளன என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூரில் முகக்கவசம், கபசுரக் குடிநீா் ஆகியவற்றை வழங்கிய உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூரில் முகக்கவசம், கபசுரக் குடிநீா் ஆகியவற்றை வழங்கிய உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 1,500 நபா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, தயாா்நிலையில் உள்ளன என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா், கொரடாச்சேரி பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அவா் தெரிவித்தது:

கரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க, பல்வேறு நிலைகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு, போா்க்கால அடிப்படையில் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1665. குணமடைந்து பலா் வீட்டுக்குச் சென்ற நிலையில் 200 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா். இறப்பு சதவீதம் மிகக் குறைவு. மேலும் ஒரே நேரத்தில் 1500 நபா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எல்லா காலங்களிலும் மக்களுக்கு உதவுவதற்கும், மக்களை பாதுகாப்பதற்கும் தமிழக அரசு தயாராக உள்ளது என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியா்கள் புண்ணியகோட்டி, ஜெயபீரித்தா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநா் விஜயகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பன்னீா்செல்வம், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் கலியபெருமாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com