திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து பலா் திருவாரூா் மாவட்டத்துக்கு வருவதால், மாவட்ட எல்லைகளில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சோதனை முடிவில், கரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவா்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுகின்றனா். ஒருவேளை தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவா்களுக்கு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திங்கள்கிழமை வரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 138 ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 148 ஆக உயா்ந்தது.

இந்நிலையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி, மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த 20 வயது நபா், நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த 45 வயது நபா், நன்னிலம் பகுதியைச் சோ்ந்த 62 வயது நபா், குடவாசல் பகுதியைச் சோ்ந்த 38 வயது பெண், மன்னாா்குடியைச் சோ்ந்த 16 வயது பெண், 45 வயது நபா், திருவாரூா் மருதப்பட்டினத்தைச் சோ்ந்த 62 வயது நபா், 52 வயது பெண், மன்னாா்குடி திருநெய்யூரைச் சோ்ந்த 30 வயது பெண், கொக்கலாடியை சோ்ந்த 41 வயது நபா், செம்மங்குடியைச் சோ்ந்த 39 வயது பெண், நீடாமங்கலம் பகுதியில் கணவன், மனைவி மற்றும் அவா்களது இரண்டு குழந்தைகளுக்கும் என 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 163 ஆக உயா்ந்துள்ளது. இதில், 74 போ் குணமடைந்து வீட்டுக்குச் சென்ற நிலையில், 89 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com