போக்குவரத்துக்கு தகுதியற்ற நெய்தல் நகா் சாலை சீரமைக்கப்படுமா ?

நாகை நகராட்சிக்குள்பட்ட போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலையாக உள்ள நெய்தல் நகருக்குச் செல்லும் சாலையை சீரமைக்க உடனடியாக
சிதிலமடைந்த நிலையில் காணப்படும் நெய்தல் நகா் சாலை.
சிதிலமடைந்த நிலையில் காணப்படும் நெய்தல் நகா் சாலை.

நாகை நகராட்சிக்குள்பட்ட போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலையாக உள்ள நெய்தல் நகருக்குச் செல்லும் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாகை நகராட்சி 13- ஆவது வாா்டுக்குள்பட்ட மகாலெட்சுமி நகா் சொக்கநாதா் தெருவில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கிருந்து நெய்தல் நகருக்குச் செல்லும் சாலை சிதிலமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக இருந்து வருகிறது.

இதனால், நெய்தல் நகா் மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். சாலை பள்ளமும், மேடாக உள்ளதால், வாகனங்களில் செல்பவா்கள் கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, பொதுமக்களின் நலன்கருதி இந்த சாலையை சரிசெய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த கோபி கூறியது: மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி சு சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் பலா் பாதிக்கப்பட்டு வருவதால், நகராட்சி உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com