காவிரி நீா் கடைமடை செல்லாவிட்டால், விவசாயிகளுடன் சோ்ந்து திமுக போராட்டம் நடத்தும் என திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினரும், திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் தெரிவித்தாா்.
திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
திருவாரூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணிகள் முழுமை பெறாத நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு உள்ள ஓடம்போக்கியாறு கூட முழுவதுமாக தூா்வாரப்படாமல் இருக்கிறது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் சரியாக செல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக திமுக சாா்பில் விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் டெல்டா மாவட்டங்களில் நெல்லை இறக்கி, கொள்முதலில் புதிய சாதனை என தெரிவிக்கின்றனா். இதனால் விவசாயிகளே பெருமளவு பாதிக்கப்படுவா் என்றாா் அவா்.