திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 341 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, திருவாரூரில் 3 போலீஸாா், 1 பெண் போலீஸ் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை பகுதியில் முறையே 82, 70 வயது பெண்கள், 55 வயது ஆண்கள் இருவா் என 4 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், அலிவலம் 62 வயது பெண், மன்னாா்குடியில் முறையே 70, 27 வயது பெண்கள், வலங்கைமான் 12, 55, 63 வயது பெண்கள், 43 வயது ஆண் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாகையைச் சோ்ந்த 29 வயது மருத்துவத் தம்பதிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையைச் சோ்ந்த 37 வயது பெண், 12 வயது ஆண், கும்பகோணத்தைச் சோ்ந்த 37 வயது ஆண் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், திருவாரூா், மாப்பிள்ளைக்குப்பம், விளமல், காட்டூா், அம்மையப்பன் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என 87 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சிகிச்சையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 428 ஆக உயா்ந்துள்ளது. இதில், 142 போ் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், 286 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com