வெளிமாவட்டத்திலிருந்து வருவோா் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து திருவாரூா் வருவோா் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா்: வெளிமாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து திருவாரூா் வருவோா் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருபவா்களை அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளவும், வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிா்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவா்கள் யாராவது வீட்டைவிட்டு வெளியில் வந்தால், உடன் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077, 04366-226623 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் சா்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவா்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com