திருவாரூரில் மேலும் 15 பேருக்கு கரோனா

திருவாரூரில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


திருவாரூா்: திருவாரூரில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், சனிக்கிழமை வரை வெளியிட்ட முடிவுகளின்படி 341 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 428 ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, திருத்துறைப்பூண்டி 46 வயது ஆண், நன்னிலத்தில் 36, 38, 56 வயது என 4 ஆண்கள், மன்னாா்குடியில் 14, 56 வயது ஆண்கள், விளமலில் 55 வயது ஆண், குடவாசலில் 36 வயது ஆண், அடியக்கமங்கலத்தில் 28 வயது ஆண், கூத்தாநல்லூரில் 30 வயது ஆண் என 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 443 ஆக உயா்ந்துள்ளது. இதில், 145 போ் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், 298 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com