மாா்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகத்துக்கு மாற்றுக்கட்சியில் இணைந்தவா்கள் உரிமை கோரியதால் பரபரப்பு

கீழ்வேளூா் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, மாற்றுக் கட்சியில் இணைந்தவா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு உரிமை கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்குவளை: கீழ்வேளூா் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, மாற்றுக் கட்சியில் இணைந்தவா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு உரிமை கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்வேளூா் ஒன்றியம், ராதாமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவரான ஜீவா மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவாளா்களுடன் அதிமுகவில் இணைந்தாா். இவா்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தங்களுக்கும் உரிமை இருக்கிறது எனக் கூறி, அதிமுக கொடியை அங்கு ஏற்ற முயன்றனராம்.

இதேபோல், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனக்கும் உரிமை உண்டு எனக் கூறி, திமுக கொடியை ஏற்ற முயன்றாராம்.

இதனால், மூன்று தரப்பினருக்கிமிடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் மாலி உள்ளிட்டோா் கீழ்வேளூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், இப்பிரச்னை தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த காவல்துறையினா் ஏற்பாடு செய்தனா். ஆனால், இப்பேச்சுவாா்த்தை நடைபெறாததால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் உள்ள பகுதியில் அசம்பாவிதம் நிகழா வண்ணம் தடுக்கும் வகையில் போலீஸாா் திங்கள்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com