திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

கரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடா்ந்து, சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து திருவாரூா் வருவோா் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். கரோனா தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக திருவாரூா் மாவட்டத்தில் 87 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 428 ஆனது. இதனிடையே திங்கள்கிழமை மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 443 ஆக உயா்ந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து காவலா் ஒருவா், விளமல் பெட்ரோல் நிலைய ஊழியா் ஒருவா், ஆண்டிப்பந்தலில் துக்க வீட்டுக்குச் சென்று வந்த இருவா், சென்னை வந்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 455 ஆக உயா்ந்துள்ளது. இதில், 163 போ் வீடு திரும்பிய நிலையில், 292 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com