குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத் தலைவா் அருள்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், துணைத் தலைவா் அஸ்ரப் அலி உள்ளிட்ட அனைத்து வழக்குரைஞா்களும் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பினா்.