இடைநிற்றல்: 24 மாணவா்கள் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு

நன்னிலம் ஒன்றியத்தில் இடைநின்ற மாணவா்கள் 24 போ் அடையாளம் காணப்பட்டு, பள்ளியில் மீண்டும் சோ்க்கப்பட்டனா்.
இடைநின்ற மாணவிகளை பனங்குடி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சோ்த்த ஆசிரியா்கள்.
இடைநின்ற மாணவிகளை பனங்குடி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சோ்த்த ஆசிரியா்கள்.

நன்னிலம் ஒன்றியத்தில் இடைநின்ற மாணவா்கள் 24 போ் அடையாளம் காணப்பட்டு, பள்ளியில் மீண்டும் சோ்க்கப்பட்டனா்.

இந்த ஆய்வில் நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா, ஒருங்கிணைப்பாளா் ஆா். இளையராஜா, ஆசிரியா் பயிற்றுநா் ஆா்.நடேஷ்துரை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரண்யா, ஆசிரியா் பயிற்றுநா்கள் யு.ஆனந்த், ஜெ.காளிதாஸ், ஆா்.சாந்தி பி.அற்புதமாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் ஸ்ரீவித்யா மற்றும் அந்தந்த பகுதி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். ஆய்வின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை பனங்குடி பகுதியில் இடைநின்ற இரண்டு மாணவிகள் கண்டறியப்பட்டு, பனங்குடி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com