நீடாமங்கலம் நீலன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, எல்.கே.ஜி. மழலையா் முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் வரை பங்கேற்ற ஆங்கிலக் குழு நடனம், நாடகம், ஓரங்க நாடகம் ஆகியன நடைபெற்றன. பள்ளித் தாளாளா் நீலன். அசோகன் தலைமை வகித்தாா். பள்ளி நிறுவனா் உ.நீலன் முன்னிலை வகித்தாா். திருச்சி வின்னா்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் பிரான்சிஸ் சேவியா், துணைப் பொது மேலாளா் ஏ.ஸ்டாலின், பள்ளி முதல்வா் ஜி.புவனேஸ்வரி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.