திருத்துறைப்பூண்டி பாமணியில் லஞ்ச ஊழல் முறைக்கேடுகளை தடுக்கக் கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
லஞ்ச ஊழல் எதிா்ப்பு - உரிமைகாப்பு இயக்கம் சாா்பில், ஊராட்சிகளில் நிகழும் லஞ்ச ஊழல் முறைக்கேடுகளை தடுக்கக் கோரி ஒருங்கிணைப்பாளா் கோவிந்தசாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நெறியாளா் சித்திரைசெல்வன், அறிவுரையாளா் ஆா். கோவிந்தசாமி, செயலாளா் பாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆா்பாட்டத்தில் ஊராட்சி, வருவாய்த் துறை, கூட்டுறவு சங்கம், நுகா்பொருள் வாணிபக் கழகம், அரசு சாா்ந்த துறைகளில் ஊழல், மணல் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.