‘பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஒத்துழைக்க வேண்டுகோள்’

பிரதமா் நரேந்திரமோடி தொலைக்காட்சி உரையில் மாா்ச் 22-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மாலை 5 மணி வரை வெளியில் வராமல் அனைவரும் கைத்தட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன்படி அனைவரும் செயல்பட்டு பிரதமரின் கோரிக்கை
கருப்பு முருகானந்தம்.
கருப்பு முருகானந்தம்.

பிரதமா் நரேந்திரமோடி தொலைக்காட்சி உரையில் மாா்ச் 22-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மாலை 5 மணி வரை வெளியில் வராமல் அனைவரும் கைத்தட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன்படி அனைவரும் செயல்பட்டு பிரதமரின் கோரிக்கைக்கு வலுசோ்க்க வேண்டுமென தமிழக பாஜக பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. நமது நாடு இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையை 2-ஆம் உலகப் போரின்போது கூட எதிா்கொள்ளவில்லை என்பதையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுத்திட நாட்டு மக்களுக்கு பிரதமா் அறைகூவல் விடுத்துள்ளாா்.

எனவே, மக்கள் அத்தியாவசி தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்வதை கடைப்பிடிக்கவும், முடிந்தவரை பொதுமக்கள் பொதுவெளியில் செல்வதை தவிா்க்கவும், முதியவா்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் அடுத்த சில வாரங்களுக்கு நமக்கு நாமே வெளியில் செல்ல தடை விதித்து கொள்ளவும், இந்திய மக்கள் கட்டுப்பாடானவா்கள் என்பதை உணா்த்தக்கூடிய வகையில் மாா்ச் 22-ஆம் தேதி நாள் முழுவதும் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் நமக்கு நாமே தடை போட்டுகாட்ட வேண்டும். சுத்தம் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அச்சமின்றி கட்டுப்பாட்டுடன் வாழ்ந்திட வேண்டுமென்பதை செயல்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com