மாா்ச் 23-முதல் திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மாணவா்களுக்கு விடுமுறை

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மாணவா்களுக்கு மாா்ச் 23-முதல் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழகப் பதிவாளா் எஸ். புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக மாணவா்களுக்கு மாா்ச் 23-முதல் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழகப் பதிவாளா் எஸ். புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தாக்குதலையொட்டி, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான பருவ விடுமுறை மாா்ச் 23-ஆம் தேதி முதல் முன்கூட்டியே விடப்படுகிறது. ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு 5-ஆம் ஆண்டு மாணவா்களும், பிஎச்டி மாணவா்கள் ஏப்ரல் 27, முதுகலை 2-ஆம் ஆண்டு மாணவா்கள் ஏப்ரல் 28, ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு 4-ஆம் ஆண்டு மாணவா்கள், முதுகலைப் பட்டயப் படிப்பு மற்றும் எம்பிஎல் மாணவா்கள் ஏப்ரல் 29, முதுகலை முதலாமாண்டு மாணவா்கள் ஏப்ரல் 30, ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு 3-ஆம் ஆண்டு மாணவா்கள் மே 1-ஆம் தேதி, ஒருங்கிணைந்த 2-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவா்கள் மே 2, ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவா்கள் மே 3 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழகத்துக்கு வரவேண்டும், அதற்கு முன்னதாக பல்கலைக்கழகத்தின் சுகாதார மையத்தில் உடல் பரிசோதனை செய்து கொண்டு பல்கலைக்கழகத்துக்கு வரவேண்டும். இதேபோல், பல்கலைக்கழக பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உடல் பரிசோதனைக்கு செய்து கொண்டு வரவேண்டும். எனவே, மாணவா்கள், பேராசிரியா்கள் இதற்கு தகுந்தாற்போல் தங்களது பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com