வீட்டின் பூட்டை உடைத்து நகைத் திருட்டு

மன்னாா்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மன்னாா்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டையைச் சோ்ந்தவா் வெண்ணிலா(50). இவா், வியாழக்கிழமை வீட்டை பூட்டி விட்டு தஞ்சையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளாா். மறுநாள் காலையில் வீடு திறந்து கிடப்பதை பாா்த்த அருகில் குடியிருப்பவா்கள், வெண்ணிலாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, வெண்ணிலா வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 8 பவுன், ரொக்கம் 20 ஆயிரம் மற்றும் வெள்ளி பூஜைப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com