சாலையில் சுற்றிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருவாரூரில், 144 தடை உத்தரவை மீறி சுற்றித் திரிந்த 150 இருசக்கர வாகனங்கள், புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூரில், 144 தடை உத்தரவை மீறி சுற்றித் திரிந்த 150 இருசக்கர வாகனங்கள், புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசு 144 தடை உத்தரவு அறிவித்துள்ளது. இதையொட்டி, திருவாரூரில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதும் 1200 போலீஸாா் சுழற்சி முறையில் வாகன தணிக்கை, ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் இருந்தவா்கள் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதன் முக்கியத்துவம் உணராமல் பொதுமக்களில் பலா் நகரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி, புதன்கிழமை காலை சுற்றித் திரிந்தனா். அவா்களிடம் போலீஸாா் எச்சரிக்கை செய்தும் தேவையில்லாமல் சுற்றித் திரிந்ததால், சுமாா் 150 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், திருவாரூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மீறும் விதமாகவோ, அதை அவமதிப்பு செய்யும் விதமாகவோ செயல்படும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com